தமிழமுதே மறைந்தாயோ !
தமிழமுதே மறைந்தாயோ !
“””””””””””‘”””””””'”””””””””””””””””
அன்பால், பாசத்தால்,
அரவணைப்பால், அனைவரையும்
நேசிக்கும் ,பண்பால்
உயர்ந்த உள்ளமே !
உறவையும், நட்பையும்
ஒருசேர உறவாடும்
உன்னத மனிதனே !
மதமாச்சரியம் இல்லாத
மதங்களுக்கு அப்பாற்பட்ட
மனித நேய அடையாளமே !
வியாழன் தோரும்
வரியவருக்கு வாரி
வழங்கிய வள்ளலே !
இல்லை என்று வருவோர்க்கு
இல்லையேனாது வழங்கிய
தமிழ்வேல் வள்ளலே !
திருக்குறள் ,தேவாரம்,
திருப்புகழ் ,கம்பராமாயணம்,
தொல்காப்பியம், நன்னூல்,
சிலப்பதிகாரம் என்றே
நூல்கள் பல பயின்று
தமிழருவியாய் உரையாற்றும்
தமிழறிவு களஞ்சியமே !
திருமண நிகழ்வில்
கலந்து மகிழ்ந்த வேலையிலே
காலன் வந்து விட்டானோ ?
அறம் பாடி விரட்டாமல் -கண்
அயர்ந்து விட்டாயோ ?
காலன் பணிமுடித்தானோ ?
கண்ணீரில் மிதக்க விட்டாயே !
அல்லாவின் திருவடியில்
இளைப்பாற சென்றாயோ ?
உன்னை இழந்து வருந்தும்
உறவுக்கு, நட்புக்கும்
ஆறுதல் சொல்வது
யார்? யார்?யார்?
கண்ணீருடன்
தஞ்சை.ந.இராமதாசு