தமிழமுதே மறைந்தாயோ !

Vinkmag ad

தமிழமுதே மறைந்தாயோ !
“””””””””””‘”””””””'”””””””””””””””””
அன்பால், பாசத்தால்,
அரவணைப்பால், அனைவரையும்
நேசிக்கும் ,பண்பால்
உயர்ந்த உள்ளமே !

உறவையும், நட்பையும்
ஒருசேர உறவாடும்
உன்னத மனிதனே !
மதமாச்சரியம் இல்லாத
மதங்களுக்கு அப்பாற்பட்ட
மனித நேய அடையாளமே !

வியாழன் தோரும்
வரியவருக்கு வாரி
வழங்கிய வள்ளலே !
இல்லை என்று வருவோர்க்கு
இல்லையேனாது வழங்கிய
தமிழ்வேல் வள்ளலே !

திருக்குறள் ,தேவாரம்,
திருப்புகழ் ,கம்பராமாயணம்,
தொல்காப்பியம், நன்னூல்,
சிலப்பதிகாரம் என்றே
நூல்கள் பல பயின்று
தமிழருவியாய் உரையாற்றும்
தமிழறிவு களஞ்சியமே !

திருமண நிகழ்வில்
கலந்து மகிழ்ந்த வேலையிலே
காலன் வந்து விட்டானோ ?
அறம் பாடி விரட்டாமல் -கண்
அயர்ந்து விட்டாயோ ?

காலன் பணிமுடித்தானோ ?
கண்ணீரில் மிதக்க விட்டாயே !
அல்லாவின் திருவடியில்
இளைப்பாற சென்றாயோ ?
உன்னை இழந்து வருந்தும்
உறவுக்கு, நட்புக்கும்
ஆறுதல் சொல்வது
யார்? யார்?யார்?

கண்ணீருடன்
தஞ்சை.ந.இராமதாசு

News

Read Previous

துபாய் நகரில் சர்வதேச வர்த்தக உறவு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை

Read Next

அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *