14 ஏப்ரல் — மாமனித மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள்
14 ஏப்ரல் — மாமனித மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள்
— மாதவன் சுப்ரமணியன் —
உண்மையில்
சிவப்பு வண்ண மானிடன் நீ…!
காலம் உனக்கு
நீலம் பூசியது….
ஆலம் உனக்கு
காவி பூசியது
நீலமும் சிவப்பும்
நிறத்தால்தான் வேறு
குணத்தால் இரண்டும்
வேர்தான்
வேறுவேறல்ல
நீலம் வானம்
சிவப்பு ஞானம்
வானமும் ஞானமும்
மானுடம் தழுவும்
உலக ஞானக் கருவூலங்கள்
சிவப்பும் நீலமும் என்பதால்தான்
லண்டன் நூலகம்
என்றும்
உங்கள் இருவரையும்
உச்சி மோந்து
மெச்சுகிறதில்லையா…?!
இங்கோ
இன்னும்
அம்பேத்கர் பெயர் வைக்கும்
மனம் மற்றவர்க்கு வரவில்லை….
தங்கள் பிள்ளைகளுக்கு
மற்றவரில் யாரேனும்
10 /100 பேர்
அம்பேத்கர் பெயரிட்டு
அகம்மகிழ்ந்து கொள்ளுங்கள்….
பிறர் வாழும்
10/100 தெருக்களுக்கு
இவர்பேர்வைத்து
இன்புறுங்கள்
தானாக முன்வந்து
தலித்துக்குப்
பெண் கொடுங்கள்
4 தலைமுறையாய்த்
தொடர்ந்து
ஏதோ ஓர் சாதி மாறி
ஏதோ வேறு சாதி மாறிப்
பெண்கொடுத்துப் பெண்ணெடுங்கள்
எல்லோரும்
நிச்சயமாய்ப்
பிள்ளைபெற்றெடுப்பார்கள்
அந்தப் பிள்ளைகள்
அறிவில் மட்டுமல்ல
பண்பாடிலும் மிளிர்வர்
இதெல்லாம்
நடக்கும்போது
சமத்துவ நாடாய்ச்
சமைக்கப்பட்டிருக்கும்
இந்தியா
அதுவரை
சிவப்பு எண்ணம் பேசி இருப்போம்
வான்நீல வண்ணம் வாழ்ந்து சிறப்போம்
அந்த
நீலக்காரனுக்குச்
செவ்வணக்கம்
செவ்வணக்கம்….!!!
சொல்லிடவே
வாருங்கள்
சொல்படியே
வாழுங்கள்….!