வேர்கள்

Vinkmag ad

–    க.து.மு. இக்பால், சிங்கப்பூர் –

அடங்கி இருப்பதால்

இன்னும்

வெட்டப் படாமல் இருக்கிறோம்

 

நீங்கள்

யார் யாரையோ சொல்வீர்கள்

‘மண்வாச மலர்கள்’ என்று

எங்களை மறந்து விட்டு

 

நாங்கள்

உறவுகளை மதிப்பவர்கள்;

அதனால்தான்

கிளைகளுக்கு அடிக்கடி

பூஅடை போர்த்துகிறோம்

 

நாங்கள் வெறும்

வேர்கள் அல்ல;

மண்ணையே வரையும்

தூரிகைகள்

 

மலரும் இலையும்

எங்கள் வண்ணங்கள் அல்ல;

எண்ணங்கள் !

 

நாங்கள் வரைவது

மரங்களை மட்டுமல்ல

அதன் நிழல்களையும்

 

உதிரும் ஒவ்வொரு சருகும்

பூவும்

எங்கள் கைகளுக்குத் திரும்பி வரும் –

மீண்டும்

கிளைகளில் சிறகுகள் விரிக்க !

 

பூமிக்குள் மூழ்கி

நாங்கள் மூச்சடக்குவது

நீங்கள்

சுவாசிப்பதற்காகவே !

 

News

Read Previous

விஜய் டிவியில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

Read Next

காலில் புண்ணை விரைவில் ஆற்ற ஒரு புது முறை சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published.