வள்ளலார் 201
வள்ளலார் 201
**************
பேராசிரியர்.மு.நாகநாதன்
=================================
நீடு துயில் நீக்கி
தமிழ் மக்களை விழிப்புற செய்த
பெரும் துறவி !
உள்ளொன்று வைத்து புறம்
ஒன்று பேசாத பெரும் ஆளுமை
ஆரிய வர்ணாசிரம மயக்கத்தை
வீழ்த்திய பெரும் போராளி
இடைக்காலத்தில் செருகப்பட்ட
சாதி சமய கிறுக்கல்களை அறிவு ஒளியால் சுட்டெரித்த பெரும் புலவன்!
ஆரிய ஆகம விதிகளை வெற்று வெறி கூச்சல் என்றுரைத்து
களம் கண்ட அறவோன்
வாடிய பயிரை கண்டு மனம்
பதைத்து ,
மானுட பசி பிணி நீக்கி
உணவு வழங்கும் முறையை
வழங்கிய வித்தகன்
பொது உணர்வை கற்க
பொதுமை ஓங்க
பொது வழியை கண்ட அறிவன்!
இயக்கம் கட்டி
கொடியை ஏற்றிய
சமத்துவச் சிற்பி
உருவ வழிபாட்டை ஒரம் கட்டிய
பகுத்தறிவு ஆசான்!
வள்ளலார் புகழ் ஒங்குக!
சனாதனம் சாய்க!
என்ற முழக்கம் எட்டு திக்கும்
ஒலிக்கட்டும்!
Tags: வள்ளலார்