மௌனம்
மௌனம்
ஒலியில்லை, மொழியுண்டு! உன்னால்
வலியில்லை வாஞ்சையுண்டு!
காயமில்லை! கனிவு உண்டு!
பணிவில் வாழ்ந்திடுவாய் முடிகொண்டு!
உனக்கில்லை அகராதி ஒன்று! இருந்தும்
ஓராயிரம் பொருளறிந்து
பூமியில் வாழ்வார் உண்டு! உனக்கு
அழிவில்லை! அழகில் குறைவில்லை!
ஆண்ட மொழியின் ஆளுமையில்லை!
இலக்கணம் என்று ஏதுமில்லை!
ஈருடல் ஓர்மனம் கொண்டால்
இசைவுக்கு நீதானே எல்லை!
கவிஞர் கூடும் சபையில்
கலைத்திட வேண்டும் உன்னை!
காதலர் நாடும் தனிமையில்
காத்திட வேண்டும் உன்னை!
உன்னை
சம்மதம் என்று கொள்ளலாமா?
உன்
சாகசம் அறிந்து கொள்ளலாமா?
நன்றியுடன்,
நர்கிஸ் பானு, அஜ்மான்
Tags: மௌனம்