மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக் கவிதை
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக்கவிதை
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் இன்று.
அந்தச் சூரியனை வாழ்த்த விரும்பும் சுடர் விளக்கின் கவிதை இதோ:
கூவு கருங்குயில் குரலது தமிழே !
நாவு கிளியது நவில்வது தமிழே !
மேவு கார்முகில் முழக்கது தமிழே !
தாவு கடலலைத் தளும்பலும் தமிழே !
பாவு திசையெலாம் பகர்வதும் தமிழே !
யாவுந் தமிழென ஞால முதலென
ஓவு றாதுழைத் தாய்ந்து எழுதிய
தேவ நேயனார் வாழ்க வாழ்கவே. !!!
—
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.