மழை
வாழ்க்கைக்குச் சொன்ன பாடம்
வழிந்தோடிய வெள்ளத்தில் செல்வந்தரையும் ஏழையையும்
ஒன்றாய்ச் சுமந்த ஓடம்
வழிந்தோடிய வெள்ளத்தில் செல்வந்தரையும் ஏழையையும்
ஒன்றாய்ச் சுமந்த ஓடம்
மதங்களுக்குள் வேறுபட்ட
மனங்களை ஒன்றுபடுத்திச்
சென்றது மாமழையே!
மனங்களை ஒன்றுபடுத்திச்
சென்றது மாமழையே!
சிறுதுளி பெருவெள்ளமாம்
இல்லை இங்குதான்
பெருவெள்ளத்தில் நாமெல்லாம்
சிறுதுளியானோம்!
இல்லை இங்குதான்
பெருவெள்ளத்தில் நாமெல்லாம்
சிறுதுளியானோம்!
தரையிறங்கத் தரையின்றித்
தத்தளித்துச் சுற்றியது
ஹெலிகாப்டர்!
தத்தளித்துச் சுற்றியது
ஹெலிகாப்டர்!
எங்கு நோக்கினும் தண்ணீர்
ஒருமிடறு குடிக்க இயலாத நிலைமையை
எண்ணி வழியும் கண்ணீர்
ஒருமிடறு குடிக்க இயலாத நிலைமையை
எண்ணி வழியும் கண்ணீர்
தண்ணீர் குடிக்கத்தான்
தாகத்துடன் நின்ற மக்களைக்
குடித்ததோ மழை?
தாகத்துடன் நின்ற மக்களைக்
குடித்ததோ மழை?
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
Tags: மழை