மறுபடிநீ வரவேண்டும் !

Vinkmag ad

மறுபடிநீ வரவேண்டும் !

( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )

மிடிக்கான பார்வையுடன்
மீசைவைத்த பாரதியாய்
துடுக்காக எழுதிநின்ற
துணிவான எழுத்துமன்னா

அடுக்கடுக்காய் பலதந்தாய்
அனைவரையும் இழுத்துவைத்தாய்
வெடுக்கென்று பேசிடினும்
விதம்விதமாய் சொன்னாயே

உன்னெழுத்தை விஞ்சுதற்கு
உள்ளாரோ எழுத்தாளர்
மண்ணுலகில் உயிர்பெற்று
மறுபடிநீ வரவேண்டும்

தமிழெழுதி தமிழெழுதி
தலைநிமிர்ந்து நின்றாயே
தமிழுலகம் இப்போது
தலைவணங்கி நிற்கிறது !

ஜெயகாந்தா மறைந்தாயா
நினைக்கவே முடியவில்லை
ஜெயம்தந்த ஜெயகாந்தா
நீஎன்றும் வாழுகிறாய் !

News

Read Previous

மறத்தமிழே மறுக்காதே ………………

Read Next

வனம் – பயணக் கட்டுரை – மின்னூல் – ஆரோக்ய. பிரிட்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *