மறக்க முடியுமா …………….
மறக்க முடியுமா
================
பறக்கும் விமானம் ஏறி
பகட்டு வாழ்வு தேடி
சென்ற பின்னும்
கிராமத்து மண்ணின் மகிமை
பசுமாட்டின் பால் சுவை
உறக்கத்தைக் களைக்கும்
குயில் ஓசை மணிைஓ
விட்டு விட்டுக் கூவும்
சேவலின் குரல்
தட்டித் தட்டி எழுப்பும்
அம்மாவின் தொல்லை
திட்டிய வாறு அழைக்கும்
தந்தையின் கோபம்
பொறுமை இழந்து எழுந்து
வந்தவுடன் முறித்து எடுத்து
பல் துளக்கும் வேப்பங் குச்சி
அன்றாடம் அரங்கேறும் காலைக்
காட்சி கிராமத்து வாழ்வை
மறக்க முடியுமா மச்சி…!!!
பாசத்தில் கொஞ்சம்
அக்கறை உள்ளது
போல் அப்பாவிடம்
நடிப்பது கொஞ்சம்
மாட்டுக் கொட்டகைக்குள்
சென்று மாடுகளை தடாவி
விட்டு ஆட்டுக்குட்டியுடன்
விளையாடி அப்பா வெளியேறி
தலை மறையும் வரை காத்திருந்து
மட்டைப் பந்து விளையாட ஓடியதை
மறக்க முடியுமாடா மாப்புள…!!!
தந்திரங்கள் பல செய்து
பக்கத்து கிராமத்தின்
கோயிவில்களுக்குத் திருவிழா
பார்க்கப் போய் தாவணி
பச்சிக்கு டாவடித்து
செம்மையாக வாங்கிய
செய்தியை சொல்லிச்
சொல்லி சிரித்தாளேடா
நம்ம கருவாச்சி அவள்
நினைவுதான் இப்போது
போச்சு…!!!
சொந்தங்கள் ஒன்று
கூடும் வேளை நம்
கையில் கிடைத்த
சில்லறையை வைத்து
கோலிக் குண்டு ஆடி
சண்டை இட்ட கதையை
எவ்வாறுடா மறக்க முடியும்
மச்சான்…!!!
தாத்தா கூறும் கதை
கேட்பதுபோல் பாசாங்கு
செய்து அவர் கையில்
உள்ள மிட்டாயை எதிர்
பாராத்து இருந்த மழலைகால
நினைவு மலை போல் அசையாமல்
மனதில் உள்ளதடா நண்பா…!!!
பணம் தேடி பட்டணம்
வந்த பின்னே தவற
விட்ட சொந்தங்களை
எண்ணி கண் தினமும்
நீர் வடிக்குதடா தோழா…!!!
பல ஆண்டு சென்ற பின்
சென்று பார்க்கையிலே அன்று
பச்சை சோலையாக இருந்த
வேளாண்மை மறைந்து மங்கிய
காஞ்சு போன நிலம் கண்டு நான்
கலங்கி நின்றேன் இன்று…!!
ஆர் எஸ் கலா
இலங்கை