மகுடம் என் கையில்
________________________ருத்ரா
“சலவைச்சட்டைக்குள்
சல்லடை பனியன்”
இந்த கவிதை தந்த
கவிஞனுக்கு
மணி மகுடம் சூட்ட வேண்டும்.
மகுடம் என் கையில்
முகம் இன்னும் தெரியவில்லை.
இந்தக்கவிதைக்கு
எத்தனையோ தலைப்புகள்
சூட்டி மகிழலாம்.
இப்போது எனக்குப் பிடித்த
தலைப்பு இதுவே.
“இந்தியப்பொருளாதாரம்”