மகாத்மா காந்தி – மலைக்கவைக்கும் வரலாறு!
மகாத்மா காந்தி
மலைக்கவைக்கும் வரலாறு!
——————————
30.01.2016
——————————
அன்பும் அறநெறியும் அண்ணலின் வாழ்க்கையில்
என்றும் துணைநிற்க வாழ்ந்தவர்! மற்றவர்கள்
புண்படுத்திப் பார்த்தாலும் பண்படுத்திப் பார்த்தவர்!
பண்பகத்தை நற்றமிழே! போற்று.
இந்திய நாட்டின் விடுதலைப் போரில்
தங்களது இன்னுயிரைத் தந்த தியாகிகள்
என்றும் இறவாப் புகழுடன் வாழ்வார்!
நெஞ்சமே! நினைத்து வணங்கு.
மதுரை பாபாராஜ்