மகளிர் தின கவிதை
என்னை கண்ணே என்றாய்
என் கண்ணின் கருமணியே என்றாய்
என் உயிரே நீ தான் என்றாய்
எனக்கு உலகமே நீ தான் என்றாய்
இப்படி ஒவ்வொருமுறையும்
நீ மகளிர் தின வாழ்த்து சொல்கின்றாய்
தாய் இல்லாத எனக்கு
தாய்க்கு தாயாய் இருக்கின்றாயே
தாய்மைக்கு பேதம் இல்லை
நீ தாயுமானவனாய் இருப்பதனால்
மகளிர்தின வாழ்த்துக்கள் அப்பா
—– சுபஸ்ரீஸ்ரீராம்.