மகளிர் தின கவிதை

Vinkmag ad

என்னை கண்ணே என்றாய்

என் கண்ணின் கருமணியே என்றாய்

என் உயிரே நீ தான் என்றாய்

எனக்கு உலகமே நீ தான் என்றாய்

இப்படி ஒவ்வொருமுறையும்

நீ மகளிர் தின வாழ்த்து சொல்கின்றாய்

தாய் இல்லாத எனக்கு

தாய்க்கு தாயாய் இருக்கின்றாயே

தாய்மைக்கு பேதம் இல்லை

நீ தாயுமானவனாய் இருப்பதனால்

மகளிர்தின வாழ்த்துக்கள் அப்பா

—– சுபஸ்ரீஸ்ரீராம்.

News

Read Previous

கொடி

Read Next

தன்னம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published.