பேராசிரியர் அப்துல்லாஹ் மறைவுக்கு ஈர அஞ்சலி
பேராசிரியர் பெரியார் தாசன் ( எ )
அப்துல்லாஹ் மறைவுக்கு ( 19 ஆகஸ்ட் 2013 )
ஈர அஞ்சலி
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ஆக்கம் : கவிஞர் ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி – 630 702
செல் : 99763 72229
- இறைமறுப்புக் கூடாரத்திலிருந்து
விலகி ……………….
இப்போது தான் ……………..
தீனில் வந்து இளைப்பாறினாய் !
- பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக ஆனாய் …!
- உன் அமல்கள் ‘அண்ணாந்து’ பார்க்க வைத்தன !
- அல்ஹம்துலில்லாஹ் !
- அதற்குள் என்ன அவசரமோ
- மரணம் கள்வனைப் போல வருமாம் – அதுபோல
எல்லோரும் விழித்திருக்க
எப்படி வந்ததோ ………… மரணம்!
உன்னைப் பறித்துப் போய்விட்டதே !
- வல்ல அல்லாஹ் உங்களின்
இவ்வுலக அமல்களைப் பொருந்திக் கொள்வானாக !
- அவன் சுவனத்திலேயே
உங்கனைத் தங்க வைத்துக் கொள்வானாக !
- நம் முதல் சந்திப்பிலேயே ………….
என்னை தீனுக்குள் வர அழைத்த
முதல் ‘தஃவா’ உன்னுடையதுதான் !
இப்போது ………..
உன் பிரிவால் …………… கண்ணீருடன் !