உன் நினைப்பில் …………
இணைப்பில் வந்த நீ எங்கே ………… சென்றாய் …?
ஆக்கம் :
தமிழ்மாமணி கவிஞர் மு சண்முகம் (எ) ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி
- சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு
தமிழால்
பசுமை பாய்ச்சியவனே ……!
- குணநலம் அறிவோர் மத்தியில்
மனநலமும் அறிந்த மருத்துவனே ….!
- பேராசிரியர் பெரியார்தாசனே !
- கடவுள் பேரால் ஜாதிகளின் பேரால்
மோதிக் கொள்ளும்
கயமைக்கு முற்றுப்புள்ளி வைக்க
- பகுத்தறிவு தந்தை பெரியார் இயக்கத்தில்
இணைந்த பேரன்பே !
- காலச் சுழற்சியில் ………….
தீனில் இணைந்தாய் ……………. தித்திப்பாய் !
- அப்துல்லாஹ்வாக ஆனாய் !
- உன் பணிகள் அண்ணாந்து பார்க்க வைத்தன
அதற்குள்
- மரணத்திற்கு என்ன அவசரமோ ………….. தெரியவில்லை !
வேகமாய்………… வந்து உன்னைப் பறித்துப் போனதே …….!
எங்கள் விழிக்குடத்தை ………..
உடைத்துப் போனதே ………..!
- உன் ஆன்மா ……….. சாந்தி பெறட்டும் !
- இதுவரை, உன் இணைப்பில் இருந்த நான் ………
இப்போது உன் நினைப்பில்
Tags: பெரியார்தாசன்