பெண்களைப் போற்றுவோம் !!!

Vinkmag ad

பெண்களைப்

போற்றுவோம் !!!

 

 

–கவிஞர் சீர்காழி இறையன்பனார்—

 

பெண்ணே!

காலத்தை வென்று நிற்கும்

கண்ணே! பொன்ணே! மணியே!

போதும் போதும் உன் ஆற்றல்

புத்துலகைப் படைத்திடலாம்!

புதுப் பாதை வகுத்திடலாம்!

அடுப்பைங்கரையினிலே

அடங்கிக்கிடந்த பெண்ணே,

இன்று நீ ஆட்சிக் கட்டிலிலே

அமர்ந்துவிட்டாய்!

சூட்சி வலையினை

அறூத்தெறீந்துவிட்டாய்!

சூது மதியாளாரை விரட்டிவிட்டாய்!

ஏதுமறியாதவள் என்ற

அவப்பெயரை நீக்கிவிட்டாய்!

நித்தம் போக்கிவிட்டாய்!

அகிலம் போற்றும் வகையில்

அறிவில் உயர்ந்து விட்டய்!

அகம்பாவம் கொண்டோரை

ஆண் ஆதிக்கத்தை

அழித்துவிட்டாய்!

பெண்ணின் பெருமையை

உயர்த்தி விட்டாய்!

கண்ணீர் கடலை விட்டும்

கரையேறி விட்டாய்!

விமானம் கப்பலில்

விடிவிளக்காய் திகழ்கின்றாய்!

பொறுமையின் சான்றாய்

பூமித்தாய் தினம் போற்றும்

பெருமைக்குரிய   பெண்ணே!

கனிவான பெண்மையின்

காலப் பெட்டகமே!

பெண்ணின்றி உலகம்

தோன்றுவது எப்படி?

பெண்கலைப் போற்றி

கருனை காட்ட வேண்டாமா?

பெண்ணாய் பிறப்பதற்கே

பெரும் தவம் செய்திட வேண்டும்

என்ற சொல்லினையேற்று

பெண்ணினத்தை

காத்திடுவோம்!

 

 

News

Read Previous

ஆணவக் கொலைகளைத் தடுக்க அணி திரள்வோம் !!!

Read Next

அழிந்துவரும் உயிரினங்கள்

Leave a Reply

Your email address will not be published.