பூக்களினைப் பூட்டிவைத்து பூமிக்கு வந்தரதம்!

Vinkmag ad

எங்கே என் தேவதை என்றே நான் தேடுகிறேன்..

என்னை அவள் மனச்சிறையில் என்றோ பூட்டிவிட்டாள்..
அன்பெனும் மாலைகட்டி அவளுக்காக காத்திருக்க..
இன்றுவரை வாராமல் எனைப் பேதலிக்க வைக்கின்றாள்!

தெள்ளுத்தமிழ் பாசுரங்கள் அவளுக்காய் நானெழுத..
யாரந்த பைங்கிளி  இன்றெங்கே இருக்கின்றாள்?
தேடுவதால் தென்றல்வருமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
தேவதையை நானடையும் நாளெதுவோ கூறுங்களேன்!!
பூக்களினைப்  பூட்டிவைத்து பூமிக்கு வந்தரதம்!
பாக்களினைப்  பரிசளித்தேன் பாவைக்கு என்றும் சுகம்!
உள்ளங்களில் கலவைசெய்து உயிர்கொடுத்த பவித்ரம்!
உண்மையைச் சொன்னால் நான்பெற்ற இன்பவரம்!!
கவிச்சந்திரன்
அபுதாபி..

News

Read Previous

வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !

Read Next

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது நல்லா இருந்த நரிப்பையூர் திட்டத்திற்கு என்னாச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *