புதுமைப்பெண்
புதுமைப்பெண்
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லொங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ!
மகாகவி பாரதியார் கவிதைகளில் இருந்து
Tags: புதுமைப்பெண் மகாகவி பாரதியார்