பயம்

Vinkmag ad

பயம்

=====================================================ருத்ரா

ஒரு இந்து

ஒரு பயங்கரவாதி

ஒரு தீவிரவாதி

இதெல்லாம் சேர்த்து

யாரைக்கூப்பிடுவது.

“கடவுளே!”

ஆம்

அவனைத்தான்.

பின்னே என்ன?

ராம் ராம் என்று

பஜனை செய்யும்

ஒரு மனிதன் இருந்தான்.

அவனச்சுட்டுத்தள்ள

ஒரு ராம் வந்தான்.

அவன் ஒரு கொலையாளி

அவன் ஒரு இந்து.

அவன் ஒரு பயங்கரவாதி.

அவன் ஒரு தீவிரவாதி.

ஆனாலும்

அவன் ஒரு கடவுள்

என

சுடப்பட்டவன்

“ஹே ராம்”

என்று தான் விழுந்தான்.

கடவுளுக்கு

ஈவு இரக்கம் கருணை

எல்லாம் இல்லை.

ஏனெனில்

அவனிடம் “மானுடம்”இல்லை.

எல்லா வேதங்களையும்

வாந்தியெடுத்ததாக

சொல்லப்படும் அவனிடம்

அரிது அரிது

மானிடராக பிறத்தல் அரிது

என்ற வேதம் அதாவது

அறிவு மட்டும் இல்லை.

இருந்தால் எல்லோரிடமும்

“நான்” தான் இருக்கிறேன்

என்று கீதை சொல்லிவிட்டு

தன்னையே

தற்கொலை செய்வது போல்

இந்த கொலையை செய்திருப்பானா?

கேட்டால்

தர்மம் வென்றது என்பான்.

அதர்மமும் அவனுக்கு

தர்மம் தான்.

கடவுளே

உன்னை “ஈஸ்வர அல்லா” என்று

கூப்பிட்டதற்கா

உன் சங்கு சக்கரங்களை

தூர எறிந்துவிட்டு

வெள்ளைக்காரன் கண்ட‌

துப்பாக்கியைத்தொட்டு

தீட்டுப்படுத்திக்கொண்டு

இந்த பயங்கரத்தை செய்திருப்பாய்?

கடவுளே

என்று உன்னைக் கூப்பிடக்கூட‌

இந்த தேசத்தில் “பயம்”தான்.

“கடவுளா”

இது என்ன மொழி?

சமஸ்கிருதம் இல்லையே

என்று இவர்களை

சுடுவதற்கு

ஒரு அரசாங்கத்தின் உருவில்

ஒரு அவதாரம் எடுத்தாலும்

எடுத்தாலும் எடுப்பாய் நீ.

இந்தக் கடவுள்கள்

எங்களுக்கு வேண்டாம் இனி.

 

ruthraasivan@gmail.com

News

Read Previous

குடியிருந்த கோவில் !

Read Next

த்தூ..

Leave a Reply

Your email address will not be published.