நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

Vinkmag ad

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி

                குதறி விடத்தான் கொலைவெறி

நஞ்சு கலந்து வருவதை

             நன்க றிந்த நிலையினால்

நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே

            நேரமைத் திறனு  மின்றியே

வஞ்சிக் குமிவர் பிழையினை

            வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்

          அன்னைத் தமிழும் சாகுமே

கெஞ்சிக் கேட்டா லிவர்களின்

            கொடுமை யின்னும் கூடுமே

பஞ்சில் வைத்தத் தீயினாய்

            பாழாய்ப் போகும் தாய்மொழி

பிஞ்சு நாவுகள் சொல்லுமே

           பிழையாய்த் தமிழைக் கொல்லுமே

News

Read Previous

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

Read Next

தோல் தொற்று நோய்களைத் தடுக்க…

Leave a Reply

Your email address will not be published.