நல்லவன்
நல்லவன்
நல்லவன் யாரம்மா..?
வினவினேன் பெற்றவளை…!
உள்ளவன் யாரோ.. பிறர் நலமெண்ணி
அவரே நல்லவர்.. அன்னை உரைத்தார்,
நன்மையும் உண்மையுமே
வாழ்வென கொள்வாரும்
இன்னலும் இடையூறும்
தொடராக அடைவதேனோ..
அதற்கும் அம்மாவே விடை அளித்தார்..
ஊழ்வினை கடன் உன் கடமையென்றார்..
திகைத்தேன் நான் சிறுவனான காரணத்தால்..
முதியவன் ஆனபின்னே முற்றும் உணர்ந்தேன்
தாத்தன் பாட்டி தேடிய செல்வம்
வேறவர் அடைய விடுவதும் சரியோ..?
அதுவாகி அடைகின்றோம் அவரது பாவங்களை..!
ஊழ்வினை கர்மம் உனக்கே சொந்தம்..
உணர்ந்திடு மனிதா..! தலைமுறை சிறக்கட்டும்.
மைசூர் இரா.கர்ணன்
11.07 .2021
Tags: நல்லவன்