தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்
தொல்காப்பியச் செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்
இயற்றிய
ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம் பாடல் 4
கற்றுத் தேர்ந்த அறிவுடையோர்
கலைகள் தோய்ந்த நுண்புலத்தோர்
தெற்றத் தெளிந்து உரையாடும்
திருவிற் பாண்டியன் அவையத்து
முற்றும் உணர்ந்த ஆசானாம்
அதங்கோட் டானவர் முன்னாலே
முப்பொருள் உரைத்த மூலவனே
முத்தம் தந்து அருளாயோ
பற்றறு துறவியின் இலக்கணத்தைத்
தாபத நிலையாம் என்றவனே
பசலை பரவிய தலைவிக்கிப்
பாங்கி கூறும் பயில்மொழியும்
உற்றுளி உதவும் கல்வியைப்போல்
உறுபொருள் உரைத்த உத்தமனே
சிரித்து மகிழ நாங்களுமே
சிந்தா முத்தம் தருவாயே
Tags: தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்