தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

Vinkmag ad

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

கவிஞர் இரா. இரவி.

**

உலகிற்கு எழுத்தறிவித்தவன் தமிழன் என்று
உணர்த்தியது தொல்லியல் ஆய்வில் கீழடி இன்று

உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைந்து
ஒற்றுமைப் பொங்கலை இட்டு மகிழ்வோம்

பாவாணர் உரைத்தார் அன்றே நன்றே
பைந்தமிழே உலகின் முதல்மொழி என்றே

தமிழர்களாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம்
தமிழ்மொழியின் சிறப்பை தமிழர்கள் அறிந்திடுவோம்

உலகிற்கு நாகரிகம் கற்பித்தவன் தமிழன்
உன்னத அறிவியலும் அறிந்தவன் தமிழன்

நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைத்து
நாம் தமிழர்கள் என்று தலைநிமிர்ந்து நிற்போம்

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு
அற்புதத் தமிழுக்கு உண்டு என்பது உணரு

தமிழிலிருந்து பிறந்தவை தான் மற்ற மொழிகள்
தமிழ்ச் சொற்கள் பல உண்டு ஆங்கிலத்தில்

கன்னடத்திலும் பல உண்டு தமிழ்ச் சொற்கள்
கேரளாவின் மலையாளத்திலும் உண்டு தமிழ்ச் சொற்கள்

ஆதியில் சிறந்து பிறந்த அற்புதம் தமிழ்
அனைத்து மொழிகளின் தாய் நமது தமிழ்

செம்மொழிகள் சில இருந்திட்ட போதும்
செம்மொழிகளில் சிறந்த மொழி நம் தமிழ்

காலத்தால் அழியாத கற்கண்டு நம் தமிழ்
கண்டு உணர்ந்து கற்பிப்போம் குழந்தைகளுக்கு தமிழ்

உழவைப் போற்றிடும் உன்னதத் திருநாள்
உழைப்பைப் போற்றிடும் ஒப்பற்ற நன்னாள்

புத்தரிசிப் பொங்கலிட்டு புத்தாடைகள் அணிந்து
பூரித்து மகிழ்ந்திடுவோம் உலகத் தமிழர்கள் யாவரும்!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணிக்கு உரக்க நீ சொல்லடா புறப்படு தமிழா!

News

Read Previous

இயல்பு வாழ்க்கையும், இயல்பற்ற வாழ்க்கையும்

Read Next

ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *