ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்…

Vinkmag ad

ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்… உங்களுக்கே தெரியவில்லை
…………………………………..
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த உலகில் நாம் இறைவனுக்கு மட்டுமே அச்சப்பட வேண்டும். பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உற்றார் உறவினர்கள் உள்பட நல்லவர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். ஒரு உண்மையான முஸ்லிமுக்கு , மற்றவர்களை விட 20 நபரின் பலத்தை இறைவன் நமக்கு அளித்துள்ளான். உண்மையான முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும்? ஓரிறை கொள்கையை கடைபிடித்து, இறைவனுக்கு இணை வைக்காமல் (ஷிர்க்) , 5 நேர தொழுகையை பேண வேண்டும். மகர் கொடுத்து திருமணம் செய்வதுடன், வட்டி, மது , விபசாரம், திருட்டு, கொலை ஆகிய பெரும் பாவங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.
மறுமைக்கான கல்வியில் (குர்ஆன்) முழுமை பெற வேண்டும். ஒருவர் அரபு அல்லது தாய் மொழியில் குர்ஆனை அர்த்தம் புரிந்து படித்து முடிக்க வேண்டும். குர்ஆனில் முக்காலத்துக்குரிய விஷயங்கள் (Pre, Past, Future) புதைந்து கிடக்கின்றன. எந்த மாதிரியான கால சூழ்நிலையிலும் குர் ஆன் நமக்கு வழிகாட்டுவதுடன், விடையும் அளிக்கின்றன. இப்படிப்பட்ட குர்ஆனை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஓதி, அதன்படி நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் இறைவனின் கிருபை ஒவ்வொருவரையும் தேடிவரும். சிறு துளி பெரும் வெள்ளமாக மாறுவது போல், ஒவ்வொரு முஸ்லிமும் ஒழுங்காக நடந்து கொண்டால் மிகப்பெரும் பலமாக மாறிவிடும். இந்தியாவில் உள்ள 25 கோடி முஸ்லிம்களும் இறைகோட்பாட்டை சரியாக பின்பற்ற தொடங்கினால் இதர 100 கோடி மக்களை எதிர்கொள்ள முடியும். தற்கால அதிகார பல மிக்கவர்களின் அதிகார அத்துமீறல்களை இறை கிருபையால் வென்றெடுக்க முடியும்.
இந்த உலகிற்கு தற்காலிக பலனை அளிக்கின்ற கல்விக்கு அளிக்கின்ற அக்கறை இம்மைக்கும், மறுமைக்கும் உதவும் குர்ஆன் கல்வியை படிப்பதில் அக்கறை குறைந்து வருகிறது. நமது குழந்தைகளை மதரசாக்களுக்கு அனுப்பி குர்ஆன் கல்வியை பெற ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும்.
/ நாம் பெயரளவுக்கு மட்டுமே முஸ்லிம்களாக உள்ளோம். தீனை முழுமையாக பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
/ தொழுகை இல்லாத வீட்டில் சைத்தான் புகுந்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் தொழுகையை அனைவரும் பேண வேண்டும்
/ இந்த உலகில் உள்ள மாய பொழுதுபோக்கு அம்சங்களில் இருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். / ‘எந்த பாவத்தையும் மன்னிப்பேன். ஆனால் இணைவைப்பவர்களின் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன்” (குர்ஆன் 4:48)என்று இறைவன் குர்ஆனில் சுட்டி காட்டுகிறான். எனவே ஓரிறை கொள்கையில் உறுதிபட்டவர்களாக ஒவ்வொருவரும் வாழ்ந்தால் ஊரில் மட்டுமல்ல நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை அளிப்பான்.
/ நெருப்பால் படைக்கப்பட்ட சைத்தான்களின் அட்டகாசம் பெருகிவிட்டது. இவற்றில் இருந்து நாம் தப்ப வேண்டுமானால் இறை கிருபையை நாம் செல்ல ஒவ்வொரு முஸ்லிமும் தம்மை நல் வழிப்படுத்திக்கொள்ள வேண்டும். முஸ்லிமாக பிறந்ததே பெரும் பேறு. உண்மையான முஸ்லிமாக ஒவ்வொருவரும் வாழவேண்டும்/ மனிதனால் உருவாக்கப்பட்டவற்றில் அநீதி இருக்கலாம். ஆனால் இறைவன் நீதியை நிலைநாட்டுவான்- அந்த நீதி கிடைக்க ஒவ்வொரு முஸ்லிமும் இரு கை ஏந்தி அவன் வழிநடப்போம். வல்ல ரஹ்மான் நமக்கு வழிகாட்டுவான். ஒளி காட்டுவான்.

News

Read Previous

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

Read Next

அச்சம் தவிர்

Leave a Reply

Your email address will not be published.