சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

Vinkmag ad

ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா

வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக

தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா

பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க!

கூரைகளும்நனி சிறக்கும்படி   கூறுதல்நெடு  நோக்கம்

கூரையிலுள    விசிறிச்சுழற்  குளிர்ப்பேச்சினைக் கூறும்

கூறிடும்மணிக் கடிகாரமும்    கழியும்பொழு தாலே

மாறிடும்மணி  களின்நேரமும் மதித்தாருயர் வாரே

செய்யும்தொழில்  எல்லாம்நலம்     சேரும்நலம்  ஆக

பொய்யும்கள    வும்போக்கிடு     பேசும்புகழ்   சேர

மெய்யும்மன    மும்கூடிய      மெய்யாம்பணி யாlலே

பெய்யும்மழை   காணும்நிலம்    பூக்கும்வளம் போல

நாட்காட்டியும்  சொல்லும்விதம்     நாளும்புதுச்  செய்தி

ஆட்கொள்ளவே வேண்டும்மனம் ஆர்வம்பெறச் செய்யும்

வேட்கைதரும் வேகம்தினம்  வேண்டும்செயல் நோக்கம்

தாக்கம்தரும்  ஆற்றல்பெறத்   தள்ளும்கத  வைப்போல்

சன்னலும் நம்மிடம் சொல்லிடுமே -நாம்

செகத்தினை நோக்குதல் வேண்டுமென்றே – நம்

முன்னால் நிலைக்கண்   ணாடியும்தான் – சொல்லும்

முன்னால் பிரதி பலிக்கவேண்டும்- என்றே

சொன்னால் புரியா விடைகளெலாம்  -நம்மைச்

சுற்றிலும் காட்சியாய்ச் சுழல்வதைக்காண் !- எதையும்

உன்னால் முடியும் கனவுகளும் – கூட

உண்மையா யாக வேண்டுமென்று- சொன்னார்

முன்னாள் குடியாட்(சித்) தலைவருமே- அதனை

மூளையின் மூலை பதிந்திடவே- நானும்

என்னால் முடிந்த வரையிலுமே- கவியில்

எடுத்தி யம்ப வனைந்தனனே

அதிகரணி விருத்தம்

பாடல் 01 & 02 கூவிளங்கனி, புளிமாங்கனி புளிமாங்கனி தேமா

பாடல் 03 & 04  தேமாங்கனி, தேமாங்கனி தேமாங்கனி தேமா

பாடல் 05 கட்டளைக் கலி மணி

News

Read Previous

துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் ஏற்பாட்டில் கல்விச் சுற்றுலா

Read Next

துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முத‌லாம் ஆண்டு விழா

Leave a Reply

Your email address will not be published.