கோபம்
கோபம்
=======
கோபமானது பாவம்
என்று பலர் கூறக்
கேட்டேன்….!!!
ஆனால் இந்தக்
கோபத்துக்குள்
எத்தனையோ
அடங்கி உள்ளது..!!
அத்தனையும்
பட்டியல் இட்டால்
எனக்கே வந்துவிடும்
கோபம்…!!!!
கோபம் கொடுமைகளின்
அரசன் தாங்கங்களின்
வல்லவன் தகத்து எறிவதில்
முதல்வன்.!!!
தட்டிக் கழிப்பதிலே
மந்திரி பல யுத்திகளைக்
கையாளும் தந்திரி…!!!
கடுமையான
வார்த்தைக்கு
ஆசிரியன்
அடி தடிக்கு
மாகவீரன்…!!!!
கண்ணில்
எடுப்பான்
கொதிநீரை
நெஞ்சில்
வளர்ப்பான்
வஞ்சகத்தை…!!
துணைக்கு
எடுப்பான
எலும்பு இல்லா
நாக்கை போட்டு
உடைப்பான்
உன்னைப் பற்றி
மறைத்து வைத்த பல
உண்மைகளை..!!
புத்தியை துரத்தி விடுவான்
பாசத்தை அழித்து விடுவான்
மனசாட்சியை புதைத்து
விடுவான்…!!!
பந்தத்தை எரித்து விடுவான்
மனிதன் என்ற எண்ணத்தை
நமக்கு மறைத்து விடுவான்
மண்ணில் நடக்கும் போதே
விண்ணில் பறப்பது போல்
கர்வம் கொடுப்பான்…!!!!
அழகான குடும்பத்தையே
அரக்கழித்து விடுவான்
உயிர் தோழனையும் உதறி
விடுவான் எத்தனையோ
உண்மைகளை மறைப்பான்
பொய்களுடன் குடும்பம்
நடத்த வைப்பான்…!!!
நம் உயிர்தான நமக்கு
உலகம் என்று சிந்திக்க
வழி விடாமலே நம் உடலுக்கு
நாமேயே தீங்கு செய்யும்
வண்ணம் தூண்டி விடுவான்…!!
தூக்கில் தொங்க வைப்பான்
விசம் அருந்த வைப்பான்
தீக்குளிக்க வைப்பான்
இந்தக் கோபமானது நமக்குத்தான்
கெடுதல் என்பதையே மனிதன்
நினையாவண்ணம் இறுக்கப்
பிடிப்பான்…!!!
இத்தனை கெடுதல்
புரியும் கோபத்தை
வளர விடாமல் நெருங்கும்
போதேஅதை அழித்துப் பார்
எத்தனையோ நன்மைகள்
அழகாய் வளரும் நம்மைச்
சுற்றி மனிதா….!!!!
ஆர் எஸ் கலா
இலங்கை