கொரோனா
அன்று,
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை …..
இன்று,
கூடி வாழ்ந்தால்
கொரோனாவுக்கே நன்மை …
அன்று,
ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு …
இன்று,
ஒன்றுபட்டால்
உண்டு சாவு…
அன்று,
தொட்டால்
பூ மலரும்…
இன்று,
தொட்டால்
நோய் பரவும்…
அன்று,
ஒண்ணாயிருக்கக்
கத்துக்கனும் …
இன்று,
ஒதுங்கி இருக்கக்
கத்துக்கனும் …
அன்று,
தீண்டாமை ஒரு
பாவச்செயல் …
இன்று,
தீண்டாமை
பகுத்தறிவின் செயல் …
அன்று
உலா வந்தால்
உடலுக்கு நன்மை
இன்று
உலா வந்தால்
உயிருக்கே தீமை
(கொரோனாவை வெல்வோம்)
Tags: கொரோனா