குயிலும்

Vinkmag ad

குயிலும் யாழும் உன்

குரலுக்கு அடிமையோ ..
உன் பெயர்தான்

குழந்தையோ !

 

 

புள்ளி மானும் உன்

துள்ளலுக்கு மயங்குமோ ..
வண்ண மயிலும்
வான்மழை வரக்கண்டும்

தன் ஆடல் மறந்துவிடுமோ ..
உன் ஆடலுக்கு

அடிபணியுமோ !

 

கொட்டிக் கொடுத்தாலும்

கிடைக்காத செல்வமோ ..
குலம் காக்க வந்த

குலதெய்வமோ !
கவிஞர் சை. சபிதா பானு

News

Read Previous

* அறியாமை என் யுத்தக் களம்….!

Read Next

பூவையரே பூபோல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *