குயிலும் யாழும் உன்
குரலுக்கு அடிமையோ ..
உன் பெயர்தான்
குழந்தையோ !
புள்ளி மானும் உன்
துள்ளலுக்கு மயங்குமோ ..
வண்ண மயிலும்
வான்மழை வரக்கண்டும்
தன் ஆடல் மறந்துவிடுமோ ..
உன் ஆடலுக்கு
அடிபணியுமோ !
கொட்டிக் கொடுத்தாலும்
கிடைக்காத செல்வமோ ..
குலம் காக்க வந்த
குலதெய்வமோ !
கவிஞர் சை. சபிதா பானு