காதலுடன் விழா எடுப்போம் !

Vinkmag ad

காதலுடன் விழா எடுப்போம் !
( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் )

கவியரசர் விழா சிறக்க
கடவுளை நான் வேண்டுகிறேன்
புவிமுழுதும் அவர் கவிதை
புது ரத்தம் பாய்ச்சியதே

கவிமழையைப் பொழிந்து நின்ற
கார்மேகம் கவி அரசர்
அவர் புகழைப் பாடுவதே
அனை வருக்கும் ஆனந்தம்

செவிநுகரக் கவி தந்த
கவி அரசர் அவரன்றோ
உயிர் மூச்சாய் அவர்கவிதை
உயர்ந் தோங்கி நிற்கிறதே

அயராமல் அவர் எழுதி
அனைவருக்கும் கவி தந்தார்
ஆதலால் அவர் பணிக்கு
காதலுடன் விழா எடுப்போம்

கம்பன் விழா எடுப்பதுபோல்
கண்ணதாசன் விழா எடுப்போம்
கவி கண்ணதாசனை  நாம்
கால மெலாம் போற்றிநிற்போம்

உம்பரெலாம் போற்றி நிற்க
உவப்புடனே விழா எடுப்போம்
செந்தமிழால் கவி தந்தார்
விழா சிறக்க வாழ்த்துகிறேன்.

News

Read Previous

மாற்றம் காணா ஏமாற்றம்

Read Next

​மதுரா மாமனிதர் விருதாளார் -2014

Leave a Reply

Your email address will not be published.