மாற்றம் காணா ஏமாற்றம்

Vinkmag ad

எத்தனை வண்ண
மலர்கலானாலும்
அதில் இருக்கும்
தேன்  வேற்றுமை காட்டுவது
இல்லை இனிப்புத்தான்
கொடுக்கின்றது..!!

ஆனால் ஒரே
இனமான மனிதனிடம்
நெருங்கிப் பழகும்
போதுதான் புரிகின்றது
அவனின் விஷக் குணம்..!!

அவன் கூறும்
கடும் வார்த்தை
கண்டு  ஒருஅடி
எட்டியே நிக்கின்றோம்..!!

எட்டி நின்றாலும்
விடுவது இல்லை
இரக்கம் என்ற மனம்
ஒன்று…!!

தவிக்கும் போது
நம்மை அழைக்கின்றான
தேவை முடிந்த பின்னே
வெறுக்கின்றான்..!!

மதி கெட்ட மாந்திரரிடம்
விதி விட்ட வழி என்று
வாழ்கின்றனர் சில
உறவுகள்..!!

பணம் காட்டும்
பகட்டுக்கு பந்தத்தைக்
கொடுக்கான் இரையாய்..!!!

சொகுசு வாழ்கைக்கு
சொந்தத்தை ஒதிக்கியே
வாழ்கின்றான் போதை
என்னும் பாதையில்..!!

எத்தனையோ மதம்
அத்தனை மதத்திலும்
உள்ள நல்லவைகளை
தள்ளி வைத்து அடவாடித்
தனத்தையே கையில்
எடுக்கின்றான்…!!

பார்வைக்கு
அத்தனை பேரும்
மலர் போல் மனிதன்
சில நாள் வாழும்
மலருக்குள் உள்ள
புனிதம் பல ஆண்டு
வாழும் மனிதனுக்குள்
இல்லாமலே போய் விட்டது..!!

மாற்ற முடியாத
ஏமாற்றம் இது
உலகம் என்று ஒன்று
உருவான நாள் முதலாய்..!!

அரசன் இருந்து ஆண்டி வரை
மிருகம் இருந்து மனிதன் வரை
ஒன்றை ஒன்று அழித்தே
வாழத்துடிக்கும் உலகம் இது..!!

தினமும் தடுக்க முடியாமல்
பார்த்துக் கொண்டு இருக்கும்
இறைவன் பொறுமை
இழக்கும் போது வருகின்றது
இயற்கைப் பேரிடர் அழித்து
அள்ளி வாரி எடுத்துப்
போகின்றது..!!!

அதை மறந்து மீன்டும்
பாம்பின் விஷத்தை
விட விஷமாக மாறுகின்றான்
மனிதன் வார்த்தையிலும்
வாழ்கையிலும்…!!

திருந்தா ஜெம்மம்
திருந்தப் போவது இல்லை
நாம் இறந்த பின்னும்
இது நடக்கப் போவது இல்லை
என்பதில் ஐயம் இல்லை..!!!

ஆர்  எஸ்  கலா
இலங்கை

News

Read Previous

மீண்டும் ஆரம்பிப்போம்

Read Next

காதலுடன் விழா எடுப்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *