கவிதை படைக்க ஆசை கொண்டேன்
தலைப்பு :
“” கவிதை படைக்க ஆசை கொண்டேன் “”
இளம் தென்றல்
என் தேகம் தீண்டிவிட !
மஞ்சள் வெயில் என் மேனியை !
பொன்னாய் மின்ன செய்துவிட !
வானவில்லின் வண்ணங்களை கண்டு !
மயங்கிய என் மனம் வர்ணித்துவிட !
மழைத் துளிபட்டு நிலமகள்!
மண்வாசம் எழுப்பி ! மனங்களைக் கவர்ந்து விட !
சத்தமின்றி முட்டுக்கள் மெல்ல விரிந்துவிட !
மெல்லிய பூக்களை தேன் வண்டுகள் வட்டமிட !
மாலை நேர சூரியன் மலைக்கு நடுவில் மறைந்துவிட !
கரு மேகக்கூட்டங்கள் மழை பொழிய இணைந்துவிட !
மூங்கிலிலிருந்து மெல்லிசை வெளிப்பட !
பூ மணத்தில் என் மனம் !
புத்துணர்ச்சி அடைந்து விட !
கவிதை படைக்க ஆசை கொண்டேன் !
முனைவர் சை. சபிதா பானு
காரைக்குடி