கவிதை படைக்க ஆசை கொண்டேன்

Vinkmag ad

தலைப்பு :

“” கவிதை படைக்க ஆசை கொண்டேன் “”
இளம் தென்றல்
என் தேகம் தீண்டிவிட !

மஞ்சள் வெயில் என் மேனியை !
பொன்னாய் மின்ன செய்துவிட !

வானவில்லின் வண்ணங்களை கண்டு !
மயங்கிய என் மனம் வர்ணித்துவிட !

மழைத் துளிபட்டு நிலமகள்!
மண்வாசம் எழுப்பி ! மனங்களைக் கவர்ந்து விட !

சத்தமின்றி முட்டுக்கள் மெல்ல விரிந்துவிட !

மெல்லிய பூக்களை தேன் வண்டுகள் வட்டமிட !

மாலை நேர சூரியன் மலைக்கு நடுவில் மறைந்துவிட !

கரு மேகக்கூட்டங்கள் மழை பொழிய இணைந்துவிட !

மூங்கிலிலிருந்து மெல்லிசை வெளிப்பட !
பூ மணத்தில் என் மனம் !
புத்துணர்ச்சி அடைந்து விட !
கவிதை படைக்க ஆசை கொண்டேன் !

முனைவர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Read Next

புத்தகம் வாசிப்போம்..!

Leave a Reply

Your email address will not be published.