கவிதைகள்!
சாதனை
எல்லோரும் பாரட்டினார்கள்
மகிழ்ந்தார்கள் – அவன்
எதையோ பெரிதாக சாதித்து விட்டான் – என்று!
ஆனால்- அவனுக்கு இல்லை!
யாருக்கு தெரியும்
அவன்
வெற்றியின் பின்னாலும்
ஒரு பெண் தான்
வேறொருவனின் மனைவியாக!
சமுதாய சிந்தனையாளனாகத்தான்
இருக்கிறோம்!
அந்த பிரச்சனை வேறுவுடையவனதாக
இருக்கும் பட்சத்தில்!
இதுதான்! இக்கரைக்கு அக்கரை பச்சையோ
அவனை
பார்க்கையில் – கண்களில்
பெரிதாக
மின்னும் பொறாமை
நாமும் அவனை – போல
“தானுண்டு தன் வேலையுண்டு” -என
அவனுக்கும் – தான்
இவனை போல -“ஒரு அன்பான
காதல் கணவானாக வாழ
முடியவில்லை” – என!.
சில நியாங்கள் இப்படி!
அவளுக்கு
அவனை
பிடிக்கு என்பதாலேயே
அவனுடைய தவறுகள்
நியாமாக்கப்பட்டது!
தகுதி
தீர்ப்புகள் கூட
மாற்றப்படுகிறது
தகுதிக்கு தகுந்தாற்போல!
பதில் இல்லாத கனவுகள்
கனவுகள் கூட
கரை சேர்ந்து விட்டது
அவனுடைய கல்லறையில்!
—
என்றும் அன்புடன்,
மணிமுத்து
Tags: கவிதை