கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

Vinkmag ad

 

வெளிச்சத்தில் மட்டுமல்ல

இருட்டிலும்

என்னைத் தொடரும்

நிழல்

 

கருவில் வாங்கிய கடன்

கண்ணை மூடிய பிறகும்

அகல்வதில்லை

 

என் சேமிப்புப் பெட்டி முழுதும்

காலிசெய்ய முடியாமல்

நிரம்பி வழிகிறது

கடன்

 

என் பக்தி

கடவுள் கொடுத்த கடனைத்

தீர்ப்பதல்ல;

புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம்

 

கடன் தருவதற்குக்

கடனாளிகளிடம்

என்ன இருக்கிறது?

நமக்குத் தெரிந்ததெல்லாம்

கடனை

இடம் மாற்றி விடுவதுதான்

 

உடல் சுமப்பது

உயிரையல்ல;

கடனை

News

Read Previous

தமிழின் பொற்காலம்

Read Next

பிறை பேசுகிறது

Leave a Reply

Your email address will not be published.