ஓசையற்று உதிர்ந்த மகுடம்

Vinkmag ad

http://www.satyamargam.com/articles/arts/lyrics/2510-noiseless-loss.html

 

முடியரசின் மன்னரவர்
> மரணத்தைச் சந்திக்க
> துடிதுடித்து மக்களெல்லாம்
> துயரத்தைக் கொண்டாலும்
> முடியதுவும் உதிர்வதுபோல்
> மரணங்கள் இயல்பென்றே
> குடிமைகளும் அறிந்ததனால்
> கூப்பாடு போடவில்லை.
>
> விடுமுறைகள் வேண்டவில்லை.
> வீதியிலே கூடவில்லை
> கொடுஞ்செயல்கள் வன்முறைகள்
> கொலைகளவு நாடவில்லை.
> படபடக்கும் கொடிகூட
> பார்வைக்குத் தாழவில்லை.
> அடம்பிடித்து படம்பிடித்து
> ஆன்மநலம் தே(ற்)றவில்லை.
>
> அரசநிலம் கைப்படுத்தி
> அடக்கத்தைச் செய்யவில்லை.
> முரசொலிக்க வானொலியில்
> முழக்கங்கள் வழக்கமில்லை.
> வரமிதுவே வாழ்வென்ற
> ஓருண்மை விளங்கிவிட
> சிரம்பணிதல் என்றைக்கும்
> சாகாத இறைவனுக்கே.!
>
> ஒப்பாரிச் சாராயம்
> ஒருவருமே அருந்தவில்லை.
> துப்பாக்கி முழக்கங்கள்
> துளைக்கின்ற சப்தமில்லை.
> எப்போதும் போலத்தான்
> இந்நாளும் செல்கிறது.
> இப்பாரும் அதிசயிக்கும்
> இயல்பான மாற்றமிதே.
>
> பாமரனும் அரசனுமே
> பக்கத்துப் பக்கத்தில்.
> சாமரமா? சுழற்காற்றா?
> செயலேட்டில் அவரெழுத்தே!
> யாவருமே ஓர்நிறைதான்.
> இடுகாட்டின் கணக்கீட்டில்.
> ‘பூ’வருமா? ‘தலை’ விழுமா?
> புதைந்ததுவும் ரகசியமே!
>
> தேசத்தின் அரங்குகளில்
> திருப்புகழ்ச்சிப் பாட்டில்லை.
> காசற்றோர் காசுள்ளோர்
> கணக்குகளும் காணவில்லை.
> மாசற்ற தன்மையன்றி
> மதிப்புகளும் வேறில்லை.
> பாசத்தால் இச்செய்தி
> பாடங்கொள் பாரதமே!

News

Read Previous

உறவுகள் விரிவடையட்டும்

Read Next

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.