ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை
ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை
விண்ணின் தூதர் விதைத்தார் செய்தி
வெளிச்ச தாரகை வானத்தில் உதிக்கும்!
மண்ணில் பிறக்கும் மானுட தெய்வம்
மாட்டுத் தொழுவம் மகிமையில் சிறக்கும்!
கண்ணில் ஒளியுடன் கருணை பாலன்
காட்சி யளிப்பான் காலம் மதிக்கும்!
தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டால்
தரணியில் அவன்புகழ் தரமென நிலைக்கும்!
மானுடம் தழைத்து மண்ணுயிர் செழித்திட
மரியாளின் வயிற்றில் மனுமகன் பிறந்தார்!
தேனுடன் வேம்பென தீமைகள் மறைய
தேடிடும் உயிர்க்கு தெய்வமென தெரிந்தார்!
கூனுடல் சமுதாய குற்றங்கள் நீங்கிட
குவலயம் சிறந்திடும் கொள்கையை வகுத்தார்!
தானுடல் ஆணியால் தட்டிய போதிலும்
தர்மத்தை அழியாது தரணிக்கு பகுத்தார்!
கொண்டாடும் தினமென கோகுலன் பிறப்பை
கூடியே களித்திடும் கொள்கை வேண்டாம்!
திண்டாடும் சமூகம் திருத்திட வேண்டி
தினாமொரு சேவை தெய்வம் விரும்பும்!
உண்டாக்கு நன்மையை உனக்குள் என்றும்
உண்மை ஓங்கிட உயர்ந்தே நிற்கும்!
மண்ணில் பிறந்த மழலையின் அருளால்
மாறிடும் மனதினில் மகிமை பிறக்கும்!
-ப.கண்ணன்சேகர், திமிரி.
செல் 9698890108.