உலக முதியோர் தின வாழ்த்துக்கள்
உலக முதியோர் தின வாழ்த்துக்கள்.
21.08.2023
பிறப்பு என்பது இயற்கையே .
இறப்பு என்பதும் இயற்கையே .
இடையில் இருப்பது வாழ்க்கையே .
இதில் மூப்படைவதும் இயற்கையே .
குழந்தைப் பருவம் முதலாவதாம்.
பள்ளிப்பருவம் அடுத்ததாம்.
இளமைப்பருவம் தொடர்வதாம்.
முதுமைப் பருவம் இறுதியாம்.
குழந்தைப் பருவம் குஷியானது
பள்ளிப்பருவம் மறவாதது
இளமைப்பருவம் இனிதானது.
முதுமைப்பருவம் முடிவானது.
குழந்தைப் பருவத்து வளர்ச்சியும்
பள்ளிப்பருவத்து கல்வியும்.
இளமைப்பருவத்து அனுபவமும்.
ஒருங்கே சேர்ந்தது முதுமையாம்.
பள்ளிப்பருவத்தில் படித்திடனும்.
இளமைப்பருவத்தில் உழைத்திடனும்.
முதுமையில் பிறரை சாராமலிருக்க
முடிந்தவரையில் சேர்த்திடனும்.
இடையில் மரணம் நிகழாமல்
கடமை எதுவும் தவறாமல்
முழுமை பெற்ற வாழ்க்கையே
முதுமைப் பருவ வரமாகும்.
அறிவைப் பிறருடன் பகிர்ந்திடனும்.
அனுபவத்தால் வழி காட்டிடனும்.
எவர்க்கும் சுமையாக இருக்காமல் .
எஞ்சிய காலம் வாழ்ந்திடனும்.
முன் யோசனையுடன் திட்டமிட்டு
முதுமையை நாமும் எதிர்கொள்வோம்.
எதிர்ப்பார்ப்புகளைக் குறைத்துவிட்டு
ஏமாற்றங்களைத் தவிர்த்திடுவோம்.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்