இயற்கையைக் காப்போம்
இயற்கையைக் காப்போம்
பகலவர் பகலினில் ஒளியது நல்குவர்
நகலவர் இரவினில் குளுமை நல்குவர்
நீலவர்தனிலே நிறைந்திருப்பவர்
உயிர்களை உயிரோடு வைத்திருப்பவர்
பகலிலே ஒளிந்தவர் , இரவவினில் ஒளிர்பவர்
ஆழவர்தனிலே அலையவர் வருபவர் ,
மேகவர் திரண்டே தாகம் தனிப்பவர்
மேகங்கள் மோதிடின் வந்திடும் இடியவர்
இடியவரைத் தொடர்ந்து பளிச்சிடும் மின்னவர்,
காடவர், மலையவர் , நீரின் வழியவர்
இவையெல்லாம் படைத்தவர் , காப்பவர் , அழிப்பவர்
இயற்கை என்பேனோ , இறைவனென்பேனோ .
இவற்றை அழித்தால் நான் அதற்கிரையே .
இயற்கையவரைக் காத்தால் நானும் இறையே .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Tags: இயற்கையை காப்போம் !