அழுகை ஏனோ ..

Vinkmag ad

அழகு மலருக்கு
அழுகை ஏனோ ..

சோகத்தை விட்டுவிடு ! சுதந்திரமாய் ஆடிப்பாடி விடு !

உன் குரல் ஓசையை எழுப்பி விடு ! குழலோசை தோற்கடித்துவிடு !

புள்ளி மானாய்
துள்ளி ஓடிவிடு !

தித்திக்கும் தேன் தமிழில் பேசிவிடு !

இளம் தென்றலாய் மாறி !
இதயத்தை இன்பத்தில் திளைக்கவிடு !
இனிமையின் பிறப்பிடமாய் மாறிவிடு !
கவிஞர் சை.சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

புதுமைப்பித்தன்

Read Next

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *