அழுகை ஏனோ ..
அழகு மலருக்கு
அழுகை ஏனோ ..
சோகத்தை விட்டுவிடு ! சுதந்திரமாய் ஆடிப்பாடி விடு !
உன் குரல் ஓசையை எழுப்பி விடு ! குழலோசை தோற்கடித்துவிடு !
புள்ளி மானாய்
துள்ளி ஓடிவிடு !
தித்திக்கும் தேன் தமிழில் பேசிவிடு !
இளம் தென்றலாய் மாறி !
இதயத்தை இன்பத்தில் திளைக்கவிடு !
இனிமையின் பிறப்பிடமாய் மாறிவிடு !
கவிஞர் சை.சபிதா பானு
காரைக்குடி