புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தனின் நினைவு நாளையொட்டி …
நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் குறித்து எளிமையான மொழிநடையில் சிறுகதைகள் எழுதியவர் தமிழ் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் அவர்கள்.
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 – சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது என்கிறது விக்கிப்பீடியா.
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் 108 சிறுகதைகளின் முழுமையான தொகுப்பும்
புதுமைப்பித்தனின் 57 மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் முழுமையான தொகுப்பும்
இத்தளத்தில் கிடைக்கின்றன
Tags: புதுமைப்பித்தன்