கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை

Vinkmag ad

 

# கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.

# கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது.
# 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.
# அதற்கு சாத்தியமில்லாதவர்கள். உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி, அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம் இரண்டு நிமிடங்கள் ஒய்வு கொடுக்கலாம். கண்கள் பாதிக்கப்படாதபடி இது ஓரளவு காப்பாற்றும்.
# பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும், உடலையும் நீட்டி, மடக்கிக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம்.
# கணினியில் தட்டச்சு செய்யும்போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பது அவசியம். அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்தால் உடல் வலியைக் குறைக்கலாம்.
# பாதங்களைத் தரை மீது சமமாக வைத்திருக்க வேண்டும். உடலின் மொத்த எடையையும் பாதம் தாங்குவதால், பாதத்தைச் சமமாக வைத்திருப்பது அவசியம்.
# தட்டச்சு செய்யும்போது முழங்கைகளை இடையின் பக்கத்தில் வைத்திருப்பது, கைகளுக்கு ஆதரவாக இருக்கும். தோள்பட்டை வலியும் குறையும்.

News

Read Previous

டிராக்டர் மோதி ஆயுதப்படை காவலர் சாவு

Read Next

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *