டிராக்டர் மோதி ஆயுதப்படை காவலர் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் மீது டிராக்டர் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் புல்வாய்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் பாரமலை (26). இவர் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். ஊருக்கு வந்திருந்த பாரமலை இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வெளியே சென்றார்.

காந்தி சிலை அருகே வந்தபோது எதிரே மணல் அள்ளிவந்த டிராக்டர், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாரமலை தந்தை சண்முகவேல் முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் டிராக்டரை ஓட்டிவந்த இளஞ்செம்பூரைச் சேர்ந்த சேகர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

News

Read Previous

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றுவோம்: திருநாவுக்கரசர்

Read Next

கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *