மனசாட்சியை மறந்து போன ஊடகங்கள்!

Vinkmag ad
nurse
                                 (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
இந்திய நர்ஸ்கள் 46பேரை ஈராக்கில் ISIS போராளிகள் கடத்தி விட்டனர் என்ற ஒற்றை செய்தி மட்டுமே உண்மை என்ற நிலையையும் கடந்து,
கடத்தப்பட்ட செவிலியர்களை ISIS போராளிகள் மனித வெடிகுண்டாகவும்,மனித கேடயமாகவும் பயன்படுத்துகின்றனர் என்றெல்லாம் தங்களது மீடியா வியாபாரத்திற்காக பரபரப்பான செய்தியாக்கி,செவிலியர்கள் குடும்பத்தினரின் நிம்மதியை குழிதோண்டி புதைத்ததுதான் ஊடக தர்மமா?
ஈராக்கில் நடப்பது உள்நாட்டு பிரச்சினை மட்டுமே.இப்போதைய போராளிகள் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய ஆட்சியாளர்களின் கொடூர தாக்குதலுக்கு தங்களது குடும்பத்தினரை இழந்து,பொருளாதாரத்தை இழந்து நிர்கதியாய் நின்றவர்கள்.
இழந்து பட்டுபோன தங்களது உரிமையை வென்றெடுக்கும் போராட்டமே தற்போது அங்கு யுத்தகளமாய் மாறியுள்ளது.
போராளிகளின் இலக்கு தங்களது எதிரியே தவிர அப்பாவி மக்கள் அல்ல,அதனால் தான் 46 இந்திய நர்ஸுகளும் பாதுகாப்பாக நமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நமது தேசத்தின் சொந்தங்கள் 46 இளம்பெண்களான செவிலியர்களை போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இம்மியளவுக்கு கூட வரம்பை மீறவில்லை என்ற தகவலை நமது சகோதரிகள் மீடியாக்களிடம் சொன்னபோது ஊடகத்துறை நியாயவான்கள்?முகத்தில் ஈ ஆடாமல் போனதேன்?
விசாரணைக்காக நமதூர் காவல்நிலையம் அழைத்து செல்லப்படும் இளம்பெண்கள் மட்டுமல்ல,கிழவியானாலும்  போலீஸாராலேயே  கொடூரமாக கற்பழிக்கப்படும் நிகழ்வுகளுக்கு மத்தியில்,
தங்களது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் போராளிகளின் கைவிரல் கூட எங்களின் மீது படவில்லை என்று நமது செவிலிய சகோதரிகள் சொன்னபோது இஸ்லாத்தின் மாண்புயர் ஒழுக்கம் வெளிப்பட்டது அற்புதமல்லவா?
ஒரு அந்நிய ஆடவரை இன்னொரு அந்நிய பெண்ணோ,ஒரு அந்நிய பெண்ணை இன்னொரு அந்நிய ஆணோ முகம் பார்த்து இச்சையுடன் பேசுவதோ,தொடுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
இந்த ஒழுக்க விழுமியங்களை கடைபிடிப்பவரே உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும்.
இந்த ஒழுக்கத்தை தான் போர்க்களத்திலும் கூட ISIS போராளிகள் கடைபிடித்துள்ளனர்.
இத்தகைய நல்லொழுக்க போராளிகளை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கைகூசாமல் எழுதுவதும்,வாய்கூசாமல் செய்தி வாசிப்பதும் எந்த வகையில் நியாயமென்று?ஊடக துறையினர் உணரவேண்டும்.
இலங்கையில் நமது தமிழ் சகோதரிகளின் கற்புகள் சிங்கள ராணுவத்தினரால் சூறையாடப்பட்ட போது பொங்கி எழுந்த விடுதலைப்புலிகளின் போராட்டம் தான் பின்னர் யுத்தகளமாய் மாறியது.
அப்போதைய சிங்கள ஊடகங்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்றும்,பயங்கரவாதிகள் என்றும் பறைசாற்றினர்.
சிங்களவனின் கூற்றை புறக்கணித்த இந்திய ஊடகத்துறை  ஈராக்கில் மட்டும் மாறுபட்ட நிலை எடுப்பதற்கு ஈராக்கியர்கள் முஸ்லிம்கள் என்பதாலா?
ஒவ்வொரு நாட்டிலும் அடக்குமுறைக்கு ஆளாகும் போது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்புணர்வுகள் ஆரம்பத்தில் போராட்டமாக துவங்கி பின்னர் யுத்தமாக மாறுவது எதார்த்தமே.
தற்போதைய இந்திய ஊடகத்துறையில் மனிதாபி மானமும்,மனிதநேயமும்,சத்தியமும்,உண்மையும் இருக்குமானால்..உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆட்சியாளர்களால் அநீதம் இழைக்கப்படும் அப்பாவி மக்களின் அவலங்களை நடுநிலையோடு வெளிக்கொணர வேண்டும்.
police

News

Read Previous

மகாகவி பாரதியார் வரலாறு

Read Next

பீ.மு.மன்சூர்

Leave a Reply

Your email address will not be published.