மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…

Vinkmag ad

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…

 

கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா இப்படிப்பட்ட ஒரு பாசிச அரச ஒடுக்குமுறையைக் கண்டதில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை சீர்குலைப்பதற்காக பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு மேற்கொண்ட வன்முறை எனும் சதித்திட்டம் படுதோல்வியடைந்த நிலையில்ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுவரலாறு காணாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

விரைவில் விவசாயிகளின் மாபெரும் எழுச்சி வெற்றிகரமாக 75 ஆவது நாளை எட்டுகிறது. இந்த நிலையில் தில்லியின் எல்லைகளான சிங்குதிக்ரிகாஸிப்பூர் ஆகிய மூன்று இடங்களையும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இப்போது இந்த தேசத்தின் அன்னதாதாக்கள்மத்திய ஆட்சியாளர்களால்வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் போல நடத்தப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவில் தேசத்தின் தலைநகரையொட்டி இப்படியொரு கொடுமையை எந்தவொரு அரசும் அரங்கேற்றியதில்லை.

 

பலமடங்கு பலத்துடன்
உண்மையிலேயே இந்த போராட்டம்இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத பெருமைக்குரியது என்று குறிப்பிடலாம். ஏனென்றால் எந்தளவிற்கு பல முனைத் தாக்குதலை அரசிடமிருந்து எதிர்கொள்கிறதோ அதைவிட பல மடங்கு பலத்துடன் கடந்த ஒரு வார காலமாக மேலும் மேலும் கூடுதலான விவசாயிகளும்பொதுமக்களும் வந்து குவிந்துஅசைக்க முடியாத சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் போர். ஆயிரம்ஆயிரமாய் புதிய விவசாயிகளும் ஆண்களும்பெண்களும்குழந்தைகளுமாய் தில்லியைச் சுற்றியுள்ள சிங்குதிக்ரிகாஸிப்பூர்ஷாஜஹான்பூர்பல்வால் ஆகிய ஐந்து எல்லைகளிலும் தினந்தோறும் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்லஉத்தரப்பிரதேசம்ஹரியானாபஞ்சாப்மத்தியப் பிரதேசம்ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எண்ணற்ற இடங்களில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துக்கள்’ கூடியிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஹரியானாவிலும் பிற இடங்களிலும் நெடுஞ்சாலைகளில் அனைத்து சுங்கச் சாவடிகளும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியிருக்கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மைதானங்களாக மாறியிருக்கின்றன.

 

சதிகளை முறியடிக்கும் விவசாயிகளின் ஒற்றுமை
ஜனவரி 26 அன்று தில்லி செங்கோட்டையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்ட வன்முறை அரங்கேறியவுடனேஅதை சாக்காக கொண்டுவிவசாயிகள் மீது அரசின் ஒடுக்குமுறை துவங்கியது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீதும் தலைவர்கள் மீதும் மொத்தம் 44 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது தில்லி காவல்துறை. பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 122 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 16 பேர் 20 வயதிற்குட்பட்டவர்கள்; 10 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவரான 18 வயது தீபக்கைத்தால் என்ற கிராமத்திலிருந்து வந்தவர்;மிகவும் முதியவரான 80 வயது குர்முக்சிங்பஞ்சாப் மாநிலத்தின் பதேகார் சாகிப் மாவட்டத்தின் சமஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறு விவசாயி. ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர். குர்முக்சிங்இந்திய ராணுவத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் 30 பேரை காணவில்லை. அவர்களை ஒப்படையுங்கள் என்று கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான டிராக்டர்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். விவசாயிகள் சங்கங்களின் 60க்கு மேற்பட்ட தலைவர்களை, ‘தேடப்படும் குற்றவாளிகள்’ என்று முத்திரை குத்தியுள்ளனர்.

 

திறந்தவெளி சிறைக்கூடங்களாக மாற்றும் இழிபுத்தி

இப்படி அடி மேல் அடி வாங்கிய பாஜக அரசு தற்போது விவசாயிகளை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது. போராட்டக் களங்களை திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அனைத்துப் போராட்டக்களங்களும் இப்போது பல அடுக்கு மின்சாரக் கம்பிவேலிராட்சத இரும்பு ஆணிகளை சாலையில் பதிப்பதுதடுப்பு சுவர்களுக்கு இடையே கான்கிரீட் கலவையை நிரப்பி மதில்களைப் போல மாற்றுவதுதொட்டால் அறுத்துவிடும் கம்பிகளை வரிசையாக பரப்பிக் கட்டுவது என கொடிய ஆயுதங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல் இதற்கு முன் நாட்டில் எங்கும் நடக்காதது. விவசாயிகளுக்கு குடிநீரும்மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த தற்காலிக கழிப்பறைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுவிட்டன. தில்லிஉ.பி.ஹரியானா காவல்துறைகளின் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் கமாண்டோ படை பிரிவுகள்அதிரடி படைப்பிரிவுகள் அனைத்து போராட்டக் களங்களிலும் குவிக்கப்பட்டுள்ளன. அனைத்து எல்லைப்பகுதிகளிலும் மட்டுமின்றிஹரியானாவின் பல மாவட்டங்களிலும் இணையதள சேவைதுண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும்உள்ளூர் மக்களுக்கும் கடுமையான துன்பம் தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல விவசாயிகள் சங்கங்களின் டிவிட்டர் பக்கங்கள்மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.

 

மேலும் வீரியமடையும் போராட்டம் 
ஆனால் அரசாங்கமும்காவல்துறையும் ஏவியுள்ள இந்த தாக்குதல்கள்விவசாயிகளின் போராட்டத்தை இன்னும் வீரியமடையச் செய்துள்ளன என்பதே உண்மை.கிராமங்கள் மாற்றி கிராமங்கள் குடிநீர் டேங்கர்களை வரிசையாக போராட்டக் களங்களுக்கு அனுப்பத் துவங்கியுள்ளன. உணவும்அத்தியாவசியப் பொருட்களும் பலதடைகளைத் தாண்டி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.குருத்வாராக்களும் பொது சமையல் கூடங்களும் (லேங்கர்கள்) ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டரை மாத காலமாக லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உணவளித்து வரும் குருத்வாராக்களும்லேங்கர்களும் இந்த எழுச்சியில் பிரம்மாண்டமான பங்கினை ஆற்றி வருகின்றன. மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. அதற்கு உண்மையான அடையாளமாக விவசாயிகள் எழுச்சி நம்முன் நடந்து கொண்டிருக்கிறது.

கட்டுரையாளர் : அசோக் தாவ்லேதலைவர்அகில இந்திய விவசாயிகள் சங்கம்

       தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

News

Read Previous

கொஞ்சம் சிரித்தால் தப்பில்லை….

Read Next

ஆடம்பரம் ஒரு அழிவுப்பாதை…!

Leave a Reply

Your email address will not be published.