ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
——————————————–
வெளிநாடு வாழ் மக்களின்
மேலான சிந்தனைக்கு…….!
—————————————————-
அன்பிற்கினியவர்களே!

புதிதாக நாம் ஒன்றும் சொல்ல
வரவில்லை. ஒரு ஞாபகமூட்டல்தான்.
அதாவது வெளிநாடுகளில் பணியாற்றும் நம்மில் சிலர், தாங்கள் வேலை செய்யும்
கம்பெனிகளைப் பற்றியோ, தாம் என்ன
பணி செய்கிறோம் என்பது பற்றியோ,
அல்லது கம்பெனியின் முகவரியையோ தொலை பேசி எண்களையோ,நம் மனைவி யிடமோ அல்லது பெற்றோரிடமோ சொல்
வதே இல்லை. முழு விபரமும் கொடுப்பது மில்லை.அயல்நாடுகளில் பணியாற்றும்
நம்மில் சிலரோ, நமதூர்வாசிகளுடன்
தொடர்பு கொள்வதுமில்லை, காயல் நல
மன்ற கூட்டங்களில் கலந்து கொள்வது மில்லை,நம் மக்களை சந்திப்பதுமில்லை.

அது போன்றே வெளிநாட்டில் வேலை
செய்பவர்கள் தாங்கள் பணி புரியும்
கம்பெனிகளில் எனக்கு ஏதாவது திடீர்
உடல் நலக் குறைவோ,விபத்தோ அல்லது
மரணமோ ஏற்பட்டால், இவரை தொடர்பு
கொள்ளவும் என்ற இந்திய விபரங்களை
தாங்கள் வேலை செய்யும் கம்பெனிகளு
க்கு முழுமையாய் கொடுப்பதில்லை.

மேலும் குடும்பத்துடன் வெளிநாடு
களில் வசிப்பவர்கள், தனக்கு ஏதாவது
உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ,அல்லது
மரணம் ஏற்பட்டாலோ யாரை தொடர்பு
கொள்ளனும் என்ற விபரங்களை மனைவி
யிடம் சொல்லாமே இருந்து விடுவதால்,
இவரது திடீர் மரணத்தால் மனைவியும் மக்களும் நிலை குலைந்து செய்வதறி
யாது தவிக்கும் நிலைக்கு அவர்களை
நாம் தள்ளி விடுகிறோம்.

வெளி நாட்டில் ஒருவர் மரணித்தால்
அவருடைய டாக்குமென்டுகள், முகவரி
மற்ற விபரங்கள் முறையாக இல்லாது
போனால், இறந்த நாட்டில் மைய்யத்தை
அடக்குவதிலும் சிரமம்,சொந்த நாட்டுக்கு
கொண்டு வருவதிலும் சிரமம், அவரது
சேமிப்பு மற்றும் கம்பெனி வழங்கும்
பணங்களை யாருக்கு அனுப்புவது என்ற
விபரமில்லாத காரணத்தால், அவரது
பணங்கள் உரியவருக்கு கிடைப்பதில்
சிரமம் இன்னும் என்னென்னவோ சிரமம்.

அண்மையில் சவூதியில் மரணித்த
நமதூர் சகோதரரை அடக்கம் செய்ய
பெரும்பாடாகி விட்டது. காரணம் அவர்
பணியாற்றிய கம்பெனி விபரமோ போன்
நம்பரோ, அவருடன் பணியாற்றிய அல்லது அக்கம் பக்க நமதூர்வாசி அல்லது அவரது
நண்பரின் தொலைபேசி நம்பரோ எதுவும்
இறந்தவரின் மனைவிக்கு தெரியாத
காரணத்தால், தகவல் பரிமாற்றத்தில் சிரமமேற்பட்டு மைய்யத்தை அடக்குவதில்
தாமதமேற்பட்டு விட்டது. ஆனாலும்
இந்த பணியில் தங்களை முழுமையாய்
அர்ப்பணித்து சேவையாற்றும் சிலரின்
முழு முயற்சியால் உதவியால் அந்த மைய்யத்து விரைவில் அடக்கப்பட்டது.
ஏக நாயன் அல்லாஹ்…… தன்னலமற்ற
இந்த அடியார்கள் மீது தனது அருளைப் பொழிவானாக ஆமீன்.

தீ என்று சொல்வதால் நாக்கு ஒன்றும்
சுட்டு விடாது. அதுபோலதான் எனக்கு
மரணம் ஏற்பட்டால் இன்னாரை தொடர்பு கொள் என்று சொல்வதால் மரணம் வந்து விடாது. ஆகையால் மேற் கண்ட விபரங்
களை தங்கள் குடும்பத்தாருக்கு அறியத் தருவது மிக முக்கியமானதும் மிகவும் அவசியமானதுமாகும்.

மிக முக்கியமாக, வெளிநாடுகளில்
மனைவி மக்களோடு வசிப்பவர்கள்
மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கை
களையும் தன் மனைவியுடன் பகிர்ந்தே
ஆகனும். திடீர் மரணங்களை விட்டும்,
துன்பங்களை விட்டும் வல்ல நாயன்
அல்லாஹ் நம் அனைவரையும் காத்து
காவல் செய்வானாக ஆமீன்.!!!

ஏ.ஆா்.தாஹா(ART)27-06-2020

News

Read Previous

புத்தகம் : வாசிப்பது எப்படி ?

Read Next

இதுதான் கல்விச் சேவை

Leave a Reply

Your email address will not be published.