முதுகுளத்தூர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
முதுகுளத்தூர் சோணை மீனாள் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் எஸ். கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக திருவரங்கம் இருதய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சேவியர் கலந்துகொண்டார். ஆசிரியர் ஆரோக்கிய அருள்தாமஸ் மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார். கணினி துறைப் பேராசிரியை மலர்விழி வரவேற்றார். விழாவில், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, வணிகவியல் துறைத் தலைவர் திலீப்குமார் செய்திருந்தார். முடிவில், பேராசிரியர் முகம்மது யூசுப் நன்றி தெரிவித்தார்