முதுமையின் ரகசியங்கள்

Vinkmag ad

 

  • நடுவயதிற்கு முன் முதுமையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
  • நடுவயதைத் தாண்டிய பின் முதுமை வந்துவிட்டதே என்று வருத்தப்படாதீர்கள்.
  • இயலாமை வருவதற்கு முன் வாழ்க்கையை அனுபவியுங்கள்.
  • நடக்கக் கூட முடியாமல் போன பின் தவறவிட்ட வாழ்க்கையை நினைத்து வருந்துப் பயனில்லை.
  • உடலில் தெம்பு இருக்கும்போதே ஆசைப்பட்ட இடங்களுக்கு போய்வாருங்கள்.
  • வாய்ப்பு கிடைக்கும்போது பழைய பள்ளித் தோழர்கள், அலுவலகத்தில் உடன் வேலை செய்தவர்கள், பழைய நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தியுங்கள்.
  • வங்கியில் பணத்தைப் போட்டு வைத்து காவல் காப்பதை விட, உங்களுக்குத் தேவையான போது செலவழியுங்கள். வயதாக ஆக உங்களுக்குத் தேவையானவற்றை செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு வேண்டிய பணம் காசு முதலானவற்றை தாங்களே சம்பாதித்துக் கொள்ளுவார்கள்.
  • உங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையானவற்றை சாப்பிடுங்கள்.
  • ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பனவற்றை கொஞ்சமாக, மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள். எதையும் அறவே ஒதுக்காதீர்கள்.
  • உடல்நலகுறைவு ஏற்பட்டால் நம்பிக்கையுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
  • உடல்நலகுறைவு ஏற்பட்டால் கவலைப் படாதீர்கள்; வருத்தப்படாதீர்கள்.
  • வாழ்க்கை என்றால் பிறப்பு, முதுமை எய்துதல், உடல்நலகுறைவு, இறப்பு இதெல்லாம் சேர்ந்ததுதான்.
  • யாருக்கும் இவற்றில் எந்த விதச் சலுகையும் கிடையாது.
  • முடிக்க வேண்டிய வேலைகளை ஒன்று பாக்கி இல்லாமல் முடித்து விடுங்கள். விடை பெறும்போது நிம்மதியாக மன அமைதியுடன் விடை பெறலாம்.
  • மருத்துவர்களிடம் உங்கள் உடலை ஒப்படையுங்கள். கடவுளிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படையுங்கள். உங்கள் மனம் உங்களின் வசம் இருக்கட்டும்.
  • கவலைப்படுவது உங்கள் உடல்நலகுறைவை சரி செய்யும் என்றால் தாராளமாகக் கவலைப்படுங்கள்.
  • கவலைப்படுவது உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்றால் கவலைப்பட்டுக் கொண்டே இருங்கள்.
  •  கவலைபடுவதில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமென நீங்கள் நினைத்தால் மறுப்பே இல்லாமல் கவலைப்படுங்கள்.
  • ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
  • உங்களுக்கு அருகில் இருக்கும் உங்கள் பழைய,  நீண்ட நாளைய துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். யாரோ ஒருவர் முதலில் விடை பெற வேண்டும், இல்லையா?
  • எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் பழைய நண்பர்களுடன் பேசி சிரியுங்கள். நாள் செல்ல செல்ல இந்த வாய்ப்புகள் குறைந்து போகும்.
  • தினமும் புன்னகையுங்கள். வாய்விட்டு சிரியுங்கள்.
  • அழவேண்டுமா, சத்தமாக அழுது மனப்பாரத்தை இறக்கி விடுங்கள்.
  • கனவுகள் நின்றுவிட்டால் வாழ்க்கையும் நின்றுபோகும்; நம்புவதை நிறுத்தும்போது நம்பிக்கை போய்விடும்; அக்கறை போய்விட்டால் அங்கு அன்புக்கு இடமில்லை. இன்பதுன்பங்களை பங்கு போட்டுக்கொள்ள முடியாதபோது நட்பு முறிந்துவிடும்.
  • ஓடிக்கொண்டிருக்கும் நீர் போல வாழ்க்கை. இயன்றவரை சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லுங்கள்.
  • எல்லா முதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

News

Read Previous

கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )

Read Next

முதுகுளத்தூரில் பாலித்தீன் பைகளுக்கு தடை: வியாபாரிகளுக்கு பேரூராட்சி அதிகாரி எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *