கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )

Vinkmag ad

 

 

கல்வி என்பது

கடைச் சரக்கன்று !

 

கற்க கற்க

வளரும் அறிவின்

பதிவேடு !

 

பொய்மை போக்கி

வாய்மை உணரும்

காலச் சுவடு !

 

இது தான்

உண்மையான –

நிலையான –

அழிவில்லாத செல்வம் !

 

பிற பொன், பொருள்

செல்வங்கள்

கானல் நீரே !

 

உலகில் கருவூலம்

கல்வியறிவே !

 

அறிவு ஜீவிகளின்

கலங்கரை விளக்கு !

 

மனித ஒழுக்கத்தைக்

கட்டிக் காத்து

கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும்

அற்புத விந்தை

கல்வியே !

 

ஏன்? எப்படி?

எது? என்ன?

எவ்வாறு?

என்னும் வினாக்களை

எழுப்பும் பகுத்தறிவை

வகுத்துக் கொடுப்பது !

மனித குலத்தின்

முகவரி ! அதுவும்

நிரந்தர முகவரி !

ஒரு நாணயத்தின்

இரு பக்கங்கள்

ஒழுக்கமும் கல்வியும் !

 

மனித மாண்பின்

சிகரம் கல்வியே !

 

அடக்கமும்

அமைதியும்

பணிவும் தருவதே

உண்மைக் கல்வி !

உயிர்க் கல்வி !

 

செருக்கையும்

சுய நலத்தையும்

தருவது

ஊமைக் கல்வி !

 

மரணம் வரை

கற்றல் தொடர

ஊக்கமளிப்பது

கல்வியே !

 

மணம் வீசிக் கொண்டே

இருக்கும் வண்ணமலர்

கல்வி தானே !

 

அறிதல்

புரிதல்

உணர்தல்

தெளிதல்

எல்லாமே

கல்விக்குள் !

 

கசடறக்

கற்றால்

பிற கற வாழலாம்

இப்பூலகில் !

News

Read Previous

முதுகுளத்தூரில் இருந்து பேருந்துகளில் சென்று அஞ்சலி

Read Next

முதுமையின் ரகசியங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *