முதுகுளத்தூரில் இருந்து பேருந்துகளில் சென்று அஞ்சலி

Vinkmag ad

இமானுவேல் சேகரன் 57ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பரமக்குடிக்கு சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடம் உள்ளது. வியாழக்கிழமை அவரது 57ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர், பேரையூர், புல்வாய்குளம், வீரம்பல், சடையனேரி, மாரந்தை, காக்கூர், கருமல், கீழக்கன்னிசேரி, கிழக்குத்தெரு, ஆதனக்குறிச்சி, கடையகுளம், தஞ்சாக்கூர், புளியங்குடி, கீழமானாங்கரை, நெடியமாணிக்கம், உலையூர், அலங்கானூர், விளங்குளத்தூர், வெங்கலகுறிச்சி உள்பட 35 கிராமங்களில் இருந்து பரமக்குடிக்கு புறப்பட்டனர். முன்னதாக முதுகுளத்தூரில் உள்ள மாவீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்துகளில் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த வழித்தடங்கள் வழியாக பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவு இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

News

Read Previous

உங்க ஏரியா போஸ்ட் மேன் யார்…?

Read Next

கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )

Leave a Reply

Your email address will not be published.