பாம்பன் ஜமாஅத் தலைவர் என்.அய்யூப்கான் மரணம்

Vinkmag ad

பாம்பன் ஜமாஅத் தலைவர்
என்.அய்யூப்கான் மரணம்.
முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ. ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.

பாம்பன் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும். பாம்பன் வர்த்தக சங்க தலைவருமான என். அய்யூப்பன்(55) அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் இன்று வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

பாம்பன் ஜமாத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றி தற்போது தலைவராக பொறுப்பு வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த அயூப்கான் அவர்கள் வர்த்தக சங்க தலைவராக பாம்பனில் அனைத்து சமுதாய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராக திகழ்ந்தார். குறிப்பாக சிஏஏ. என்பிஆர். என்ஆர்சி.யை எதிர்த்து பாம்பனில் நடைபெற்ற பிரம்மாண்டமான கண்டன பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் முதன்மையானவர். இப்படி சமுதாய சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்ட அய்யூப்கான் அவர்கள் உடல் நலக்குறைவால் திடீர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ஆழ்ந்த இரங்கலை ஐக்கிய ஜமாத் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் இறைவனிடம் துவா செய்யுமாறு மாவட்ட ஐக்கிய ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

News

Read Previous

தோற்றுவாய்

Read Next

கருப்பு கல் எனும் ஹஜருல் அஸ்வத்

Leave a Reply

Your email address will not be published.