குறைவான வயதில் உயர்ந்த பதவி
அரசு பதவிகளில் உயர் பதவியாக கருதப்படும் நீதிபதி என்பது சமூகத்தில் மதிப்புமிக்க உயர்பதவியாகும்.
இப் பதவியை 33 வயதில் கீழக்கரையை சேர்ந்த நாகேந்திரன் அவர்களின் மகனார்
சிவபழனி
என்பவர் சிவில் கோர்ட் நீதிபதி ஆகியுள்ளார்.
மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழகத்தில் 213 பேரில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நபர்கள் மட்டும் தேர்வாகி நீதிபதி ஆகியுள்ளனர்.
இராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் கீழக்கரையை சேர்ந்த சிவபழனியும் இப் பட்டியலில் வருகிறார்.
இவரது தந்தை நாகேந்திரன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் எதிரே இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
சின்ன வயதில் பெரிய பதவியை தமது தளராத முயற்சியால் எட்டிய மனிதரை மனதார வாழ்த்துகிறோம்.
Tags: பதவி