இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்த் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியார் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக நடந்தது.
இந்த விழாவுக்கு செயலாளர் டாக்டர் பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
தொடக்கமாக இறைவாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை இலதா சேசாஸ்திரி பாடினார். விழா அறிமுகம் மற்றும் வரவேற்பை தலைவர் பேராசிரியர் மை. அப்துல் சலாம் கூறினார்.
மகளிர் அணித்தலைவி டாக்டர் திருமதி மதுரம் அராவிந்தராஜ் அமரர் த. குழந்தைச் செட்டியார் படத்தை திறந்து வைத்தார்.
சாத்தூர் டாக்டர் த.அறம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பார்த்திபன், சந்தக் கவிஞர் நா.வேலுச்சாமி துரை, இரா. இராம்மோகன், கே. செந்தில் குமார் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற தமிழ்ச் சங்க தலைவர் பேராசிரியர் மை. அப்துல் சலாம் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
வழக்கறிஞர் ஆ. இரவிச்சந்திர ராமவன்னி, அ. ஹபீபா அப்துல் சலாம், கா. இராமகிருஷ்ண சுவாமிகள், பாத்திமா சின்னத்துரை, தமிழரசி உதயக்குமார் உள்ளிட்டோருக்கு அவரவர் துறைகளில் சிறந்து விழங்கியதற்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விருதாளர்களை கு.விவேகானந்தன் அறிமுகம் செய்து வைத்தார்.
கு. இளங்கோவன் நன்றியுரை நிகழ்த்தினார். காளீஸ்வரி சுகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் மு.ச. கருணாநிதி, பொருளாளர் கா. மங்கள சுந்தரமூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் பொற்கிழி கவிஞர் இளையான்குடி மு. ஹிதாயத்துல்லா, ஊடகவியாளர் முதுவை ஹிதாயத், இலக்கிய ஆர்வலர் பெருமாள், கவிஞர் குத்புதீன் ஐபக் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.